Thursday, October 11, 2012

மீண்டும் வராத நினைவுகள்




மீண்டும் வராத நம் நினைவுகளிருந்து 
மீண்டு வர வேண்டியே இந்த கவிதைகள்...

என்னை ஆறுதல்படுத்தும் செயற்கை 
முயற்சியாகத்தான் எழுத தொடங்குகிறேன்...

எல்லா துவக்கங்களின் போதும் 
உன் நினைவு தொட்டே எழுத தொடங்குகிறேன்...

எழுதி முடிக்கும் வேளைகளில் 
விரல்களோடு சேர்த்து மனமும் நடுங்கிபோகிறது...