Thursday, March 22, 2012

நினைவுகளின் சுவடுகள்


உன்னை காதலிக்கத் தொடங்கும் போதே
காத்திருக்கத் தொடங்கி விட்டேன்.

அந்த காத்திருப்புக்கள் தான்
என்னை கவிதை எழுத வைத்தது.

அந்த கவிதைகளெல்லாம் வெறும்
சேர்க்கப்பட்ட வார்த்தைகள் அல்ல.
பிரிந்து போன நம் நினைவுகளின் சுவடுகள்.

Saturday, March 10, 2012

தீர்ந்து போன இரவு, தீராத காமம்



தீர்ந்து போன இரவு,
தீராத காமம்.

உதிர்ந்து போன சில பூக்கள்,
நீ கடித்த உதட்டுக் காயங்கள்.

உன் வாசம் வீசும் என் தோள்கள் என,
ஒரு இனிய இரவு குறித்த இன்ப
நினைவுகள் தொடர்கின்றன.

Wednesday, March 7, 2012

தனிமை திருடும் நிலவு


நாம் சேர்ந்து ரசித்த நிலா,
நிலா ரசிக்கும் போது நீ,
இருவருமே பிரகாசமானவர்களே.

உன் நினைவு தூண்டி
தனிமை திருடும் நிலவு,
நம் பிரிவு பார்த்து
தேய்ந்து மறையுதோ..

Tuesday, March 6, 2012

உணர்ந்து எழுதியது



இது எழுதி உணர்ந்ததல்ல,
உணர்ந்து எழுதியது.

முரண்பாடுகளே இல்லாத உறவு,
முழுமையடைவதற்கான வாய்ப்புகள் குறைவு.