Sunday, February 26, 2012

உன் விரல் தொடும் நிகழ்வு


சில இனிப்பான நிமிடங்களுக்காக
பல மணி நேர காத்திருப்புகளும்
அது கொடுத்த போதைகளும்,

பரிசளிக்கும் தருணங்களை
உன் விரல் தொடும் நிகழ்வென
பதிவு செய்த பேனா பிதற்றல்களும்,

இனி நாம் நேரிட விரும்பாத
நெருடலான நம் சந்திப்புகளின்
காயத்தை ஆழப்படுத்தலாம்.

Friday, February 24, 2012

இரவு நேரப் பயணங்கள்



உன்னை விட்டு பிரிந்தும்,
உன் நினைவுகளோடு சேர்ந்தும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

உனக்கான நினைவுகளைளோடு,
இறுகிய மன நிலையோடான
என் இரவு நேரப் பயணங்கள்
இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது

Wednesday, February 22, 2012

கருத்தரித்த கனவுகள்



நீ காட்சி தரும் எல்லாக் கனவுகளும்,
கவிதைகளாக கருத்தரிக்க
அருள் புரிவாய் என் காதல் தேவதையே..

நாம் பயணித்த சாலை




ஜன்னலோர இருக்கை,
தோள் சாய்ந்த நீ,
என் கை கோர்த்த உன் கை
இவை ஏதுமின்றி
நாம் பயணித்த சாலையோடு மட்டும்
உறவாடிக்கொண்டிருக்கின்றன
என் நினைவுகள்.

Thursday, February 16, 2012

கண்ணீர்


எப்போதாவது உன் நினைவுகளால்
தோன்றும் கண்ணீர்த் துளிதான்
இன்னும் நான் உயிர்த்திருப்பதை
மீண்டும் உறுதிசெய்கின்றது.

பிடிக்காததில் பிடித்தது


உன்னிடம் பிடிக்காததில் பிடித்தது,
அந்த முன்கோபமும் அப்போது நீ
என்னை திட்டும் வார்த்தைகளும் தான்.

Saturday, February 11, 2012

காதல் பரிசு


உன் பெயர் மட்டும்
எழுதி வைத்த வெள்ளைக் காகிதம்,
எனக்கு நானே
தருகின்ற காதல் பரிசு.

உறவு


நம்முடைய காதல்
மனிதம் தாண்டிய,
கடவுள் தொடாத,
வாழ்வியலில் எல்லோர்க்கும்
சாத்தியமான உறவுதான்.

Thursday, February 9, 2012

உன் உதட்டோர புன்னகை



உன் உதட்டோர புன்னகை தான்
காதல் கரை ஒதுங்கும் என்னை
மீண்டும் உள்ளிலுத்துச் செல்லுதடி...

Tuesday, February 7, 2012

மறந்து போன கனவுகள்


கடவுள் வரம் தருவதாக ஒப்புக்கொண்டால்,
மறந்து போன கனவுகளை திரும்பக் கேட்பேன்.

மறந்து போன கனவுகள் குறித்த
என் ஆசைகள் அலாதியானது.

அது எப்போதும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

நம் கடைசி சந்திப்பு


நம்முடைய எல்லா சந்திப்புகளின் போதும்
பேச்சை தொடங்கியதும் முடித்ததும் நீதான்,
நம் கடைசி சந்திப்பைத் தவிர.

நம்முடைய எல்லா சந்திப்புகளும்
ஊடலோடு தொடங்கி காதலோடு முடிந்திருக்கின்றன,
நம் கடைசி சந்திப்பைத் தவிர.

நம்முடைய எல்லா சந்திப்புகளின் போதும்
உன் கைகள் என் கைகளுக்குள் இருந்தன,
நம் கடைசி சந்திப்பைத் தவிர.

ஏனென்றால் நம் இருவருக்கும் தெரியும்
இது தான் நம் கடைசி சந்திப்பென்று...

நினைவுகள்


என் முகப் பக்கத்தின் சுவரெங்கும்
சிதறிக் கிடக்கும் கவிதைகள் யாவும்
உன் நினைவுகள் தானடி...

உன் நினைவுகளைப்பற்றி எழுதும்
எல்லா கவிதைகளுமே அழகானவை தான்.

எனக்காக நீயும் உனக்காக நானும்
நமக்காக நாமும் இத்துனை நாள்
சேமித்ததில் மிதமிருப்பது இந்த
நினைவுகள் மட்டும் தானே...

Monday, February 6, 2012

காதல் கொடுத்த பரிசு


உனக்கு பிடித்த நான் தான்,
உண்மையிலேயே எனக்கு பிடித்த நான்...

நம் பிரிதல் குறித்த புரிதல் தான்
நம் காதல் நமக்கு கொடுத்த பரிசு...

காதல்



காதல் என்பதே ஒரு வித்தியாசமான உணர்வு,
அது இருவரின் வேற்றுமைகளை களைந்து ஒன்றுபடுத்தும்,
பிறகு இருவரையும் இந்த உலகிலிருந்து பிரித்து தனிமைப்படுத்தும்.

Sunday, February 5, 2012

உன் தாவனி

தொட்டுச் செல்லும் உன் தாவனி நுனி முடிச்சி
விட்டுச் செல்ல மனமில்லாத உன் மனதின் முடிச்சவிழ்க்கிறது...

தனிமை


தனிமை என்பதே
ஒருவகை போதை தானடி,

அது தான் உன்னோடு நானிருந்த
எல்லா நிமிடங்களையும் ஞாபகப்படுத்துகிறது...

Thursday, February 2, 2012

நிலாவும் நீயும்




நிலாவானம்,முழுமதி, பிறைச் சந்திரன் என
எனை மயக்கும் மாய வார்த்தைகளுடன்
உன் பெயரும் சேர்ந்ததடி.

முத்தம்


உன்னை பார்க்கும் போது மட்டும்
சிரிக்கும் என் இதழ்கள்,
என் பெயரை கேட்டாலே
சிரிக்கும் உன் இதழ்கள்
இன்னும் ஏன் இணையவில்லை.